மக்கள் கஷ்டங்களை விட அமராவதி பணிகளுக்கே முக்கியத்துவமா? - அரசை விமர்சித்த ஷர்மிளா
அமராவதி ,30 ஏப்ரல் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக, ஆந்திர காங்கிரஸ் தலைவர் தெலுங்குதேசம் கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எரிபொருள் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வர
A


அமராவதி ,30 ஏப்ரல் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக, ஆந்திர காங்கிரஸ் தலைவர் தெலுங்குதேசம் கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எரிபொருள் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வரும் நிலையில், அரசு பெரிய ஒப்பந்ததாரர்களின் நலன்களுக்கே முன்னுரிமை அளிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து ஷர்மிளா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டீசலுக்காக விவசாயிகளும், பெட்ரோலுக்காக பொதுமக்களும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய அவசர சூழ்நிலையில் மக்களின் தேவைகளை கவனிக்க வேண்டிய அரசு, ஒப்பந்ததாரர்களுக்காக தனியாக டீசல் வழங்க வேண்டும் என்று பேசுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், விவசாயிகளை விட ஒப்பந்ததாரர்கள்தான் முக்கியமா? மக்களின் கஷ்டங்களை விட அமராவதி பணிகளுக்கே முக்கியத்துவமா? இது நல்லாட்சி அல்ல.

அரசின் முன்னுரிமை நிர்ணயத்தில் ஏற்பட்ட தோல்வி” என்றும் அவர் விமர்சித்தார்.

முதலில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடையின்றி எரிபொருள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அதன் பிறகே ஒப்பந்ததாரர்களின் தேவைகள் குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் ஷர்மிளா வலியுறுத்தினார்.

மக்களின் பிரச்சினைகளை புறக்கணித்து ஒப்பந்ததாரர்களுக்கே முன்னுரிமை வழங்கினால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA