மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகன் கருப்பு உடை அணிந்து வாக்குப் பதிவு
திருவனந்தபுரம், 09 ஏப்ரல் (ஹி.ச.) கேரளாவில் இன்று ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மகனுமான சாண்டி உம்மன், ஆளும் எல்.டி.எஃப் அரச
vote wearing black attire.


திருவனந்தபுரம், 09 ஏப்ரல் (ஹி.ச.)

கேரளாவில் இன்று ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது.

புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மகனுமான சாண்டி உம்மன், ஆளும் எல்.டி.எஃப் அரசுக்கு எதிராகக் கருப்புச் சட்டை அணிந்து வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பிளெக்ஸ் போர்டுகள் அல்லது போஸ்டர்களைத் தவிர்த்து, மிதிவண்டியில் தனியாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்தது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக உம்மன் சாண்டி வசம் இருந்த இந்தத் தொகுதியைத் தக்கவைக்க, யூ.டி.எஃப் தீவிரமாகப் போராடி வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை 10:30 மணியளவில் தனது தாய் மற்றும் சகோதரி வாக்குச்சாவடிக்கு வந்த சாண்டி உம்மன், வழக்கமான வெள்ளை நிற உடைக்கு மாற்றாகக் கருப்பு நிற உடை அணிந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

2023-ல் உம்மன் சாண்டி மறைந்த பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் இது என்பதால், இத்தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சாண்டி உம்மன் கூறியதாவது,

இந்தப் போராட்டம் ஒரு தனிப்பட்ட காரணத்திற்காக அல்ல, பல காரணங்களுக்காக நடத்தப்படுகிறது. எனது தந்தை எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆட்சியில் இருந்தபோதும் ஒன்பது ஆண்டுகளாக எல்.டி.எஃப் அரசால் வேட்டையாடப்பட்டார்.

சோலார் வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு சிபிஐ 'கிளீன் சிட்' வழங்கிய பிறகும், அந்தச் சதிக்கு பின்னால் இருந்தவர்களை எல்.டி.எஃப் அரசு பாதுகாத்து வருகிறது.

புதுப்பள்ளி தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டை அரசு தடுத்தது. எனது தந்தை உம்மன் சாண்டி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட மருத்துவமனை, பாலங்கள் மற்றும் மினி சிவில் ஸ்டேஷன் போன்ற திட்டங்கள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன.

சபரிமலை தங்க இழப்பு போன்ற சம்பவங்கள் கேரள மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b