ஹைதராபாத்தில் பழைய பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து
ஹைதராபாத், 01 மே (ஹி.ச.) ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவுக்கு அருகே பகதூர்புரா சாலையில் அமைந்துள்ள பழைய பொருட்கள் கிடங்கில் நேற்று நள்ளிரவு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த எஃகு தொழிற்சாலை, ரசாயன உற்பத்தி நிலையம் மற்றும
Massive Fire Breaks Out at Scrap Warehouse in Hyderabad


ஹைதராபாத், 01 மே (ஹி.ச.)

ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவுக்கு அருகே பகதூர்புரா சாலையில் அமைந்துள்ள பழைய பொருட்கள் கிடங்கில் நேற்று நள்ளிரவு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அங்கிருந்த எஃகு தொழிற்சாலை, ரசாயன உற்பத்தி நிலையம் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களின் குவியல்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

இரவு 11 மணியளவில் தொடங்கிய இந்த தீ விபத்து குறித்து உள்ளூர்வாசி ஒருவர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

உடனடியாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை தொடங்கியதாக அதிகாரிகள் கூறினர்.

சம்பவ இடத்தில் இருந்த தீயணைப்பு அதிகாரி ஒருவர் அளித்த தகவலில்,

பழைய பொருட்கள் கிடங்கில் இரும்பு சாமான்கள், ரசாயனங்கள், ஃபாயில் மற்றும் பெயின்ட் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்தினார். கடுமையான வெப்பம் காரணமாக இந்த பொருட்கள் தீப்பற்றி, விபத்து ஏற்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

மறுவிற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மரக்கதவுகள் மற்றும் இதர பொருட்களும் தீக்கு இரையாகின என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர கடுமையாக போராடினர். அதே நேரத்தில், சம்பவ இடத்தில் கூடிய பெருங்கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் போராடினர்.

கிடங்கில் இருந்த கிட்டத்தட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகின.

தற்போது தீ கிட்டத்தட்ட அணைக்கப்பட்டுவிட்டது, உயிர்சேதம் எதுவும் இல்லை.

தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ள நேரு உயிரியல் பூங்காவுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதி செய்தனர்.

Hindusthan Samachar / vidya.b