Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 01 மே (ஹி.ச.)
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
அனைவருக்கும் இனிய மே தின வாழ்த்துகள். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும். எனவே, இன்னும் இரண்டு நாட்கள் நாம் காத்திருப்போம்.
காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் தற்போது அடிப்படையில் ஒரு குறுந்தொழில்
(cottage industry) போல மாறிவிட்டன.முன்பெல்லாம் கருத்துக்கணிப்புகள் சில அனுமானங்களின் அடிப்படையில் நடத்தப்பட்டன. ஆனால் இப்போது அவை தொலைக்காட்சிகளில் நாள் முழுவதும் ஒளிபரப்பப்பட்டு, ஒரு வணிகமாகவே மாறிவிட்டன. மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துவிட்டனர். அவர்களின் முடிவே இறுதியானது. திங்களன்று, 75,000 வாக்குச்சாவடிகளில் மக்கள் எடுத்த முடிவு வெளிச்சத்திற்கு வரும்.
காங்கிரஸ் கட்சி மிகுந்த செயல்வேகத்துடன் இயங்கி வருகின்றது. தலைமைப் பொறுப்புகளை ஏற்பதற்குத் தகுதியான பல வேட்பாளர்களை அக்கட்சி கொண்டுள்ளது.
ஒவ்வொரு அரசியல் கட்சியும், கூட்டணியும், வேட்பாளரும் தங்கள் வெற்றி குறித்து நம்பிக்கையுடன் உள்ளனர். நம்பிக்கை இல்லாத எந்தவொரு அரசியல் கூட்டணியையும் நான் இதுவரை சந்தித்ததே இல்லை. அனைவரும் நம்பிக்கையுடனேயே தேர்தலை எதிர்கொள்கின்றனர். எனவே, திங்களன்று என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இத்தேர்தலில் த.வெ.க (TVK) ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது,
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இவை அனைத்தையும் குறித்து நாம் விவாதிக்கலாம்.
இப்போது வெறும் ஊகங்களைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை என்று கூறி கார்த்தி சிதம்பரம் தனது பேச்சை நிறைவு செய்தார்.
Hindusthan Samachar / vidya.b