புனே உஷாகிரண் மருத்துவமனையில் வெடிகுண்டு - துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
புனே, 14 மே (ஹி.ச.) மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஹடப்சர் பகுதியில் உள்ள உஷாகிரண் மருத்துவமனை வளாகத்தில் நேற்று இரவு குறைந்த திறன் வெடிபொருட்கள் கொண்ட சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்தேகத்திற்குரிய அந்த சாத
புனே உஷாகிரண் மருத்துவமனையில் வெடிகுண்டு - துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு


புனே, 14 மே (ஹி.ச.)

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஹடப்சர் பகுதியில் உள்ள உஷாகிரண் மருத்துவமனை வளாகத்தில் நேற்று இரவு குறைந்த திறன் வெடிபொருட்கள் கொண்ட சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சந்தேகத்திற்குரிய அந்த சாதனம் மருத்துவமனையின் கழிவறை அருகே காணப்பட்டது. டிஜிட்டல் கடிகாரம் போன்ற பாகம் இணைக்கப்பட்டிருந்த அந்தப் பொருளை ஒரு மருத்துவர் கவனித்து, உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

புனே நகர காவல்துறையின் மூத்த அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து மருத்துவமனையில் முழுமையான சோதனை நடத்தினர். வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை (BDDS) குண்டை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்து, கிளைடிங் மையத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்திற்கு எடுத்துச் சென்றது. தீவிரவாத தடுப்புப் பிரிவினரும் (ATS) விசாரணைக்கு உதவ வந்தனர்.

பயங்கரவாதத் தாக்குதலுக்கான சாத்தியம் உட்பட அனைத்து கோணங்களிலும் காவல்துறை, ATS மற்றும் குற்றப்பிரிவு இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன என்று புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b