2029-ல் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
ஹைதராபாத் , 16 மே (ஹி.ச) தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, இன்று 2029 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிறுத்தப்படுவார் என்று அறிவித்தார். ஹைதராபாத் இன்று நடைபெற்ற செய்தி
2029-ல் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி


ஹைதராபாத் , 16 மே (ஹி.ச)

தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, இன்று 2029 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிறுத்தப்படுவார் என்று அறிவித்தார்.

ஹைதராபாத் இன்று நடைபெற்ற செய்தி மாநாட்டில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது,

பிரதமராகும் தனிப்பட்ட ஆசை ராகுல் காந்திக்கு இல்லை. ஆனால், விகாராபாத்தில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் கட்சியின் வேட்புமனுவை ஏற்குமாறு அவர் சம்மதிக்க வைக்கப்பட்டார். அடுத்த தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்.

முதலில் காங்கிரஸ் கட்சி இந்த வேட்புமனுவை அறிவித்துவிட்டு, பின்னர் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒப்புதலைப் பெற திட்டமிட்டுள்ளது.

இந்தியா கூட்டணி சார்பில் விரிவான கொள்கை ஆவணம் ஒன்று மக்கள் ஆணைக்காக முன்வைக்கப்படும்

ராகுல் காந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக உயர்த்துவதே எனது இலக்கு. கட்சி தேசிய அளவில் அவருக்கு அளிக்கும் எந்தப் பொறுப்பையும் ஏற்க அவர் தயாராக உள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியில் 10 ஆண்டுகள் இருந்த பின் விலகியபோதும், கட்சித் தலைவர் என். சந்திரபாபு நாயுடுவுடன் மரியாதையான உறவைப் பேணி வருகிறார். சந்திரபாபு நாயுடு இன்னும் என்னை நன்றாக நடத்துகிறார். தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகும் முடிவை விஜயவாடாவில் அவரிடம் தெரிவித்தேன் .

மக்கள் இப்போது ‘ஸ்விக்கி ஸ்டைல் அரசியலை’ எதிர்பார்க்கிறார்கள். அதாவது, உடனடி முடிவுகள் வீட்டு வாசலுக்கே நேரடியாக வர வேண்டும் என விரும்புகிறார்கள்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத பங்களிப்பை தெலங்கானா வழங்கச் செய்வதே எனது நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள், 2029-ல் இந்தியா கூட்டணியின் தலைவராக முறையே மம்தா பானர்ஜி மற்றும் மு.க. ஸ்டாலின் பெயர்களை பரிந்துரைத்திருந்தனர்.

ஆனால், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ், திமுக ஆகியவை தோல்வியடைந்ததையும், பானர்ஜி, ஸ்டாலின் ஆகியோர் சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெறாததையும் அடுத்து, எதிர்க்கட்சிகளின் சமன்பாடு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சமீபத்தில் விலகியது, கூட்டணிக்குள் அதிகார உறவுகளை மாற்றும் என்றும் கருதப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b