Enter your Email Address to subscribe to our newsletters

மேற்கு வங்கம், 24 மே (ஹி.ச.)
மேற்கு வங்காளத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் 207 இடங்களை வென்று, பாஜக முதல்முறையாக ஆட்சி அமைத்தது. சுவேந்து அதிகாரி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இதனிடையே ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய இரு கட்டங்களாக நடைபெற்ற 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின்போது முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்தன.
ஏப்ரல் 29-ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது, அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சாவடிகளில் கடுமையான தேர்தல் குற்றங்களும், ஜனநாயக நடைமுறை சீர்குலைப்பும் நடந்ததைக் கருத்தில் கொண்டு, ஃபால்டா தொகுதியின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் புதிதாக மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் (ECI) உத்தரவிட்டது.
இதனுடன், பச்சிம் மக்ராஹத் மற்றும் டைமண்ட் ஹார்பர் சட்டமன்றத் தொகுதிகளில் 15 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவுக்கு ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி அத்தொகுதியில் மறுதேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 21-ஆம் தேதி பலத்த பாதுகாப்பு மற்றும் நிறுவன மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.
144-ஃபால்டா சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு நாளன்று மதியம் 1 மணி நிலவரப்படி சுமார் 60.43 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில் 144-ஃபால்டா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று காலை டைமண்ட் ஹார்பர் மகளிர் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.
வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b