மின்கசிவு காரணமாக வீட்டில் திடீர் தீ விபத்து - துரித நடவடிக்கையால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு
எட்டா, 25 மே (ஹி.ச.) உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவில் பாபு கஞ்ச் பழைய காய்கறி சந்தை பகுதியில் உள்ள பரிசு சேகரிப்பு கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர். சம்பவம் குறித்த தகவல் கிடைத்த உடனேயே தீயணைப்பு வாகனங்
மின்கசிவு காரணாமாக வீட்டில் திடீர் தீ விபத்து - துரித நடவடிக்கையால்  உயிர்ச்சேதம் தவிர்ப்பு


எட்டா, 25 மே (ஹி.ச.)

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவில் பாபு கஞ்ச் பழைய காய்கறி சந்தை பகுதியில் உள்ள பரிசு சேகரிப்பு கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர்.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்த உடனேயே தீயணைப்பு வாகனங்கள் விரைந்து அனுப்பப்பட்டன.

கிடங்கின் பல தளங்களில் பரவிய தீ, அருகிலுள்ள வீட்டின் இரண்டு தளங்களுக்கும் பரவிய நிலையில், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பாக நகர காவல் கண்காணிப்பாளர் ஷ்வேதாப் பாண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நேற்று இரவு பாபு கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்தக் கட்டிடத்தின் இரண்டு தளங்களும், அருகிலுள்ள வீட்டின் இரண்டு தளங்களும் பாதிக்கப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

சம்பவ இடத்திற்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டது. ஆரம்பகட்ட தகவலின்படி, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறினார்.

மேலும் தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில்,

தீயை அணைக்க ஏழு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

முதற்கட்ட தகவல்களின்படி,

இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b