மின்சார வாகனம் சார்ஜ் செய்யும்போது விபரீதம் - கட்டிடத்தில் திடீர் தீ விபத்து
காசியாபாத், 27 மே (ஹி.ச) உத்தரப் பிரதேசம் காசியாபாத்தில் உள்ள சூர்யா நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில், மின்சார வாகனம் சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது தீப்பிடித்ததால் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தலைமை
Tragedy While Charging Electric Vehicle


காசியாபாத், 27 மே (ஹி.ச)

உத்தரப் பிரதேசம் காசியாபாத்தில் உள்ள சூர்யா நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில், மின்சார வாகனம் சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது தீப்பிடித்ததால் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி ராகுல் குமார் கூறுகையில்,

இன்று அதிகாலை சுமார் 2:24 மணிக்கு, லிங்க் சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சூர்யா நகர் பகுதியில் உள்ள ராம்புரி S-70 கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக வைஷாலி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது

கட்டிடத்திற்குள் 15 முதல் 17 பேர் வரை சிக்கியிருப்பதாக ஆரம்ப தகவல்கள் தெரிவித்தன. இதையடுத்து, வைஷாலியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அனுப்பப்பட்டதுடன், கூடுதல் படைகளும் வரவழைக்கப்பட்டு, மொத்தம் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

நாங்கள் வந்தபோது, தரைதளம் மற்றும் 3 மாடிகள் கொண்ட நான்கு மாடி கட்டிடத்தின் தரைதளத்தில், சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்த மின்சார வாகனத்திலிருந்து தீ பற்றியதைக் கண்டோம்.

சம்பவ இடத்திற்கு வந்த உடனேயே தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியையும், குடியிருப்பாளர்களை மீட்கும் பணியையும் தொடங்கினர்.

என்று குமார் கூறினார்.

தீயணைப்புப் படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b