Enter your Email Address to subscribe to our newsletters

உத்தரகாசி, 30 மே (ஹி.ச)
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் பாட்வாரி பகுதியில் உள்ள கங்னானி அருகே, கார் ஒன்று ஆழமான பள்ளத்தில் நேற்று நள்ளிரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாநில பேரிடர் மீட்புப் படைக்கு (SDRF) தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்ததும், பாட்வாரி நிலையத்தில் இருந்து உதவி ஆய்வாளர் கப்பார் சிங் தலைமையிலும், உஜேலி நிலையத்தில் இருந்து காவலர் சக்தி சிங் தலைமையிலும் SDRF குழுவினர் மீட்பு உபகரணங்களுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, கார் பள்ளத்தின் அடியில் கிடந்தது. காரில் பயணம் செய்த 5 பேரில் 2 பேர் உயிரிழந்திருந்தனர்.
மற்ற 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இருள் மற்றும் கடினமான நிலப்பரப்பை பொருட்படுத்தாமல் SDRF குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை வெளியே கொண்டு வந்தனர்.
அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b