நந்தியாலாவில் ஒய் எஸ் ஆர் சிலை சேதம் திட்டமிட்ட சதி - நாரா லோகேஷ் குற்றச்சாட்டு
நந்தியாலா , 31 மே (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் நந்தியாலாவில் நடைபெற்ற ஒய்.எஸ்.ஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசியல் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியைச் சாடி, அமைச்சர் லோகேஷ் கடுமையான குற்றச்சா
A


நந்தியாலா , 31 மே (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் நந்தியாலாவில் நடைபெற்ற ஒய்.எஸ்.ஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசியல் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியைச் சாடி, அமைச்சர் லோகேஷ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியதாவது :

மாநிலத்தில் அமைதியையும் சட்ட ஒழுங்கையும் குலைக்க திட்டமிட்ட முயற்சிகள் நடைபெறுகின்றன.

இதற்குப் பின்னால் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

மேலும், நந்தியாலா சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் உள்ளூர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தொடர்புடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நடந்த சில சம்பவங்களை சுட்டிக்காட்டிய லோகேஷ்,

“கோழி கத்தி” மற்றும் “கல் வீச்சு” போன்ற நிகழ்வுகளையும் குறிப்பிட்டு, இவை அனைத்தும் திட்டமிட்ட அரசியல் சதிகளாக இருக்கலாம் என விமர்சித்துள்ளார்.

இதற்கிடையில், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மீது அவர் நேரடியாக விமர்சனம் செய்து, “எத்தனை முறை பிடிபட்டாலும் சதி அரசியலை நிறுத்த மாட்டீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA