ரோந்து பணியின் போது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு – பாதுகாப்பு படையினர் 5 பேர் படுகாயம்
கொல்கத்தா, 06 மே (ஹி.ச.) மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், நசாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சார்பேரியா-அகர்ஹாட்டி கிராம பஞ்சாயத்தின் பாமன்கேரி பகுதி (வார்டு எண் 14)-ல் இன்று மத்திய படையினருடன் ரோந்து சென்ற காவல்துறையினர் மீது
Unidentified Individuals Open Fire During Patrol


கொல்கத்தா, 06 மே (ஹி.ச.)

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், நசாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சார்பேரியா-அகர்ஹாட்டி கிராம பஞ்சாயத்தின் பாமன்கேரி பகுதி (வார்டு எண் 14)-ல் இன்று மத்திய படையினருடன் ரோந்து சென்ற காவல்துறையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் காயமடைந்தனர்.

நசாத் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி (OC), ராஜ்பாரி அவுட்போஸ்ட் காவலர் மற்றும் பெண் காவல் அதிகாரி ஆகியோர் துப்பாக்கிக் குண்டு பட்டு காயமடைந்தனர்.

மத்திய படையைச் சேர்ந்த இரு வீரர்களும் காயமுற்றனர்.

காயமடைந்த அனைவருக்கும் மினாகா கிராமப்புற மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் கொல்கத்தாவில் உள்ள தனித்தனி மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

சம்பவ இடத்தில் இருந்து வெடிகுண்டுகள் நிரம்பிய பை ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் மற்றும் மோதல்கள் தொடர்ந்து வரும் சூழலில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை சம்பவங்களுக்கு மேற்கு வங்க தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b