Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 07 மே (ஹி.ச.)
பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரா, நேற்று இரவு மத்தியம்கிராம் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவ இடத்தில் இருந்து அவரது காரும் அகற்றப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரி மத்தியம்கிராமில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்றார்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். 2021-ஆம் ஆண்டு நந்திகிராமில் வெற்றி பெற்றதைப் போலவே, தற்போது பவானிபூர் தொகுதியில் வெளியேறும் முதல்வர் மம்தா பானர்ஜியை அவர் தோற்கடித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் காரக்பூர் சதர் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திலீப் கோஷ் இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மாநிலத்தில் பாஜக தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்கிறது.
சுவேந்து அதிகாரி உதவியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நடக்கும் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டது, ஆனால் அதிகாரம் இன்னும் எங்கள் கைகளுக்கு வரவில்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக விரோதிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
மேலும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சிக்குள் நிலவும் உட்கட்சி மோதல்களே உறுதியற்ற தன்மைக்கு காரணம். பாஜக தொண்டர்கள் ஒடுக்கப்படுகின்றனர்.
இவ்வாறு கோஷ் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b