Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 14 ஜூன் (ஹி.ச.)
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய அளவில் மாணவர் பேரணியை முன்னெடுக்கிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் வரும் ஜூன் 17-ஆம் தேதி முதல் இந்தப் பேரணி நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
மாணவர் பிரச்சினைகளை முன்வைத்து காங்கிரஸ் கட்சி நடத்தும் முதலாவது பேரணி ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தொடங்குகிறது.
தேர்வு முறைகேடுகளால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதைக் கண்டித்தும், கல்வித் துறையில் வெளிப்படைத்தன்மை கோரியும் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
கோட்டாவைத் தொடர்ந்து, ஜூலை 10-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்திலும், 11-ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவிலும், 14-ஆம் தேதி தலைநகர் டெல்லியிலும் பிரம்மாண்ட பேரணிகள் நடத்தப்படவுள்ளன.
அனைத்து பேரணிகளிலும் ராகுல் காந்தி நேரடியாகப் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது, சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள், தேர்வு முடிவுகளில் முறைகேடு போன்றவற்றால் நாடு முழுவதும் மாணவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்தப் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை முன்வைத்தும் காங்கிரஸ் கட்சி இந்த தொடர் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b