Enter your Email Address to subscribe to our newsletters

நொய்டா, 15 ஜூன் (ஹி.ச.)
உத்தரப்பிரதேச மாநிலம் ஜேவாரில் புதிதாகத் திறக்கப்பட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வணிக விமான சேவைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின.
இதன் முதல் பயணமாக, லக்னோவுக்கு வணிக விமானம் இயக்கப்பட்டது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க முதல் விமானத்தில், விமான நிலையத்தின் கட்டுமானத்திற்காக நிலம் வழங்கிய ஜேவார் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவினர் பயணம் செய்தனர்.
விமான நிலைய திட்டத்திற்கு தங்களது நிலங்களை அளித்து ஒத்துழைத்த விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், முதல் பயணத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
ஜேவார் சட்டமன்ற உறுப்பினர் தீரேந்திர சிங் தலைமையில் சென்ற இந்த விவசாயிகள் குழுவினர், லக்னோவில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க உள்ளனர்.
மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பங்களித்த விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நொய்டா சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதன் மூலம், தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு இரண்டாவது சர்வதேச விமான நிலையம் கிடைத்துள்ளது.
இது டெல்லி விமான நிலையத்தின் நெரிசலைக் குறைப்பதோடு, மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கும் பெரும் உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோவுக்கான முதல் விமானத்துடன் தொடங்கியுள்ள வணிக சேவைகள், வரும் வாரங்களில் மேலும் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளன.
Hindusthan Samachar / vidya.b