வழக்கறிஞர் வீட்டை இடிக்க முயன்றதாக ஆந்திரப்பிரதேச எம்.எல்.ஏ சிந்தமனேனி மீது புகார் - முன்னாள் எம்.எல்.ஏ அப்பய்யா சவுத்ரி கண்டனம்
ஏலூரு, 18 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசம், தெந்துலூரில் வழக்கறிஞர் ஒருவரின் வீட்டை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு இடிக்க முயன்றதாக எம்.எல்.ஏ சிந்தமனேனி பிரபாகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது YSRCP-யின் முன்னாள் எம்.எல்.ஏ அப்பய்யா சவுத்ரி குற்றம்சா
வழக்கறிஞர் வீட்டை இடிக்க முயன்றதாக ஆந்திரப்பிரதேச எம்.எல்.ஏ சிந்தமனேனி மீது புகார் -  எம்.எல்.ஏ அப்பய்யா சவுத்ரி கண்டனம்


ஏலூரு, 18 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசம், தெந்துலூரில் வழக்கறிஞர் ஒருவரின் வீட்டை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு இடிக்க முயன்றதாக எம்.எல்.ஏ சிந்தமனேனி பிரபாகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது YSRCP-யின் முன்னாள் எம்.எல்.ஏ அப்பய்யா சவுத்ரி குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

ஆந்திரப் பிரதேசத்தில், குறிப்பாக ஏலூரு மாவட்டம் தெந்துலூரில் நடந்தது மிக மிக துரதிர்ஷ்டவசமான சம்பவம். சிலர் தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைக்கிறார்கள். யாராலும் அவர்களைத் தடுக்க முடியாது என எண்ணுகிறார்கள்.

அங்கு நடந்தது உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானது. எனது தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ முழுமையாக மது அருந்தியிருந்தார்.

நள்ளிரவில் ஒரு வழக்கறிஞரின் வீட்டின் முன் ஜே.சி.பி.யைக் கொண்டு வந்து, முழு வீட்டையும் இடித்துத் தரைமட்டமாக்கவும், அவர்களைக் கொலை செய்யவும் எம்.எல்.ஏ முயன்றார். ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எப்படி நடக்க முடியும்?

தற்போதைய அரசை நான் கேள்வி கேட்கிறேன். தற்போதைய எம்.எல்.ஏ எப்படி இதுபோன்ற செயல்களில் ஈடுபட முடியும்? உங்கள் எம்.எல்.ஏ இதைச் செய்திருக்கிறார், ஆனால் நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

YSRCP பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கடிகோட்டா ஸ்ரீகாந்த் ரெட்டி நேற்று இச்சம்பவம் குறித்து கூறுகையில், கூட்டணி அரசின் கீழ் ஆந்திரப் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக விமர்சித்தார். மிரட்டல், அரசியல் வன்முறை மற்றும் காவல்துறையை தவறாகப் பயன்படுத்துவது சாதாரணமாகிவிட்டதாக அவர் கூறினார்.

மேலும் எம்.எல்.ஏ சிந்தமனேனி பிரபாகர் வழக்கறிஞரின் வீட்டின் மீது நள்ளிரவில் நடத்திய தாக்குதலும், காவல்துறை காவலில் இருந்து சாய் கிருஷ்ணா காணாமல் போனதும், அரசியலமைப்பு ஆட்சி முற்றிலும் தோல்வியடைந்துள்ளதைக் காட்டுவதாக ரெட்டி கூறினார்.

Hindusthan Samachar / vidya.b