ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் - #VenkyAnil5 #NkrAR2
சென்னை, 19 ஜூன் (ஹி.ச.) சம்கிராந்தி 2027-ஐ குறிவைத்து ஒரு அதிரடி கூட்டணி உருவாகியுள்ளது. விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம் மற்றும் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இணையும் முழுநீள கொண்டாட்ட பொழுதுபோக்கு திரைப்படமான #VenkyAnil5 & #NkrAR2 தற
க


சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)

சம்கிராந்தி 2027-ஐ குறிவைத்து ஒரு அதிரடி கூட்டணி உருவாகியுள்ளது.

விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம் மற்றும் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இணையும் முழுநீள கொண்டாட்ட பொழுதுபோக்கு திரைப்படமான #VenkyAnil5 & #NkrAR2 தற்போது உருவாகி வருகிறது.

ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாஹு கரபாட்டி தயாரிக்கும் இந்தப் படத்தை, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், சுமதி. அர்ச்சனா மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்குகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

படத்தின் பிரம்மாண்டமான முஹூர்த்த விழா மற்றும் பூஜை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர், இயக்குநர் அனில் ரவிபுடி மற்றும் தயாரிப்பாளர் சாஹு கரபாட்டியிடம் திரைக்கதையை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

முஹூர்த்த காட்சிக்காக, விக்டரி வெங்கடேஷ், கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி இடம்பெற்ற முதல் காட்சிக்கு அல்லு அரவிந்த் கிளாப் அடித்தார்.

சுரேஷ் பாபு கேமராவை இயக்கி வைத்தார்.

புகழ்பெற்ற இயக்குநர் கே. ராகவேந்திர ராவ் முதல் காட்சியை இயக்கினார்.

#VenkyAnil5 & #NkrAR2 திரைப்படம், அனில் ரவிபுடியின் பாணியில் உருவாகும் முழுமையான சங்கராந்தி கொண்டாட்ட திரைப்படமாக இருக்கும்.

அதிரடியான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் கல்யாண் ராம் இணையும் தனித்துவமான கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இப்படம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கு அனில் ரவிபுடியின் தொடர்ச்சியான வெற்றி சாதனைகள், வித்தியாசமான நட்சத்திர கூட்டணி மற்றும் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் ஆதரவு ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர்.

இசையமைப்பாளர் G.V பிரகாஷ் குமார் இசையமைக்க, சமீர் ரெட்டி ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

தம்மிராஜு படத்தொகுப்பாளராகவும், A.S. பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

S. கிருஷ்ணா நிர்வாக தயாரிப்பாளராக செயல்படுகிறார்.

விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Hindusthan Samachar / Durai.J