Enter your Email Address to subscribe to our newsletters

கர்னூல் , 24 ஜூன் (ஹி.ச.)
கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரியில் நாட்டின் மிகப்பெரிய தனியார் தங்கச் சுரங்கத் திட்டத்தை ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
ரூ.405 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், இந்தியாவில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருங்கிணைந்த செயலாக்க ஆலை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள முதல் தனியார் தங்கச் சுரங்கமாக கருதப்படுகிறது. ஜொன்னகிரி, எர்ரகுடி, பகிதிராய் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 597.82 ஹெக்டேர் பரப்பளவில் இந்த திறந்தவெளி சுரங்கம் அமைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் ஆண்டுக்கு ஒரு டன் தங்கம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 12 டன் தங்க இருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மாநில அரசுக்கு முதல் ஆண்டில் ரூ.57 கோடி வருவாயும், முழு உற்பத்தி நிலையை எட்டிய பின்னர் ஆண்டுதோறும் ரூ.144 கோடி வரை ராயல்டி வருவாயும் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், நேரடியாக 300 பேருக்கும், மறைமுகமாக 300 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. ‘ஸ்வர்ண ஆந்திரா 2047’ இலக்கை நோக்கி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA