Enter your Email Address to subscribe to our newsletters

அகமதாபாத், 28 ஜூன் (ஹி.ச.)
குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா (Hydroponic Marijuana) பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து வந்த 20 வயது பயணியின் உடைமைகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தபோது, சுமார் 10.9 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பயணி கைது செய்யப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.10 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கடத்தலுக்குப் பின்னால் செயல்பட்ட சர்வதேச வலையமைப்பு குறித்து மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P