Enter your Email Address to subscribe to our newsletters

உப்பல் , 28 ஜூன் (ஹி.ச.)
தெலங்கானா பின்னணியில் உருவாகி வரும் ‘இடுப்பு காயிதம்’ திரைப்படத்தின் தலைப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் எழுந்துள்ள சர்ச்சைக்கு பிஆர்எஸ் தலைவர் கல்வகுண்ட்லா கவிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உப்பலில் நடைபெற்ற கட்சிக் கொடியேற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “‘இடுப்பு காயிதம்’ என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியவில்லை என்று கூறி சிலர் சமூக வலைதளங்களில் கேலி செய்கின்றனர்.
உண்மையில் அதன் அர்த்தம் தெரிய வேண்டுமென்றால் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம். அவருக்கு அந்த சொல்லின் அர்த்தம் நன்றாக தெரியும்” என்று கிண்டலாக தெரிவித்தார்.
பிரியதர்ஷி, நாகதுர்கா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த படம் தெலங்கானா பின்னணியில் உருவாகி வருகிறது. படத்தின் தலைப்பைச் சுற்றி சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களும், ட்ரோல்களும் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பேசிய கவிதா, தெலங்கானா மொழி மற்றும் அடையாளம் மீண்டும் மீண்டும் அவமதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். இதுபோன்ற சூழலில் காங்கிரஸ், பாஜக மற்றும் தனது சொந்த கட்சியான பிஆர்எஸ் கூட மவுனம் சாதிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
முதல்வர் ரேவந்த் ரெட்டி தெலங்கானா மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் தெலங்கானா பிரச்சினைகளில் அக்கறை காட்டவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், “ஒருவரின் மொழி மற்றும் கலாச்சாரத்தை மற்றொருவர் மதிக்க வேண்டும். ஆனால் தெலங்கானா அடையாளத்தை அவமதிக்கும் முயற்சிகள் தொடர்ந்தால் அதை இனி சகித்துக் கொள்ள முடியாது” என்று கவிதா எச்சரிக்கை விடுத்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA