Enter your Email Address to subscribe to our newsletters

உத்தரகண்ட், 05 ஜூன் (ஹி.ச.)
உத்தரகண்ட் மாநில அரசு, சார் தாம் யாத்திரை வழித்தடத்தில் உள்ள ஏழு மாவட்டங்களிலும் யாத்திரிகர்களுக்கான விரிவான ஏற்பாடுகளை முழுமையாக செய்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் மதன்
கௌஷிக் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
சார் தாம் யாத்திரையை முன்னிட்டு, குறிப்பாக யாத்திரை வழித்தடத்தில் உள்ள ஹரித்வார், டேராடூன், தெஹ்ரி, பவுரி, சமோலி, ருத்ரபிரயாக், உத்தரகாசி ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறோம். பேரிடருக்கு முந்தைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ‘ஆப்தா மித்ரா’ எனப்படும் பேரிடர் நண்பர்கள் மற்றும் ‘ஆப்தா சகி’ எனப்படும் பேரிடர் சகோதரிகள் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சிகளையும் அளித்துள்ளோம்.
இந்திய ராணுவம், விமானப்படை, NDRF மற்றும் SDRF உடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியுள்ளோம். எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ள தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் தயார்நிலையை உறுதி செய்ய அவர்களுடன் பல கூட்டு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளோம். முதலமைச்சர் நிலைமையை நேரடியாக கண்காணித்து வருகிறார்.
பருவமழையை முன்னிட்டு, பேரிடருக்கு முன், பேரிடரின் போது, பேரிடருக்குப் பின் என மூன்று கட்ட அணுகுமுறையை நாங்கள் பின்பற்றுகிறோம். மூன்று கட்டங்களிலும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எங்கள் மீட்புக் குழுக்களை களத்தில் நிறுத்தியுள்ளோம். பல ஒத்திகைப் பயிற்சிகளையும் நடத்தியுள்ளோம். பேரிடர் தயார்நிலையை அரசு மிகுந்த முக்கியத்துவத்துடன் அணுகுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b