பத்ரிநாத் தாம் கோயிலில் காணிக்கை முறைகேடு - விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு
கார்வால், 10 ஜூலை (ஹி.ச.) உத்தராகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் தாம் கோயிலில் காணிக்கை தொடர்பான முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கார்வால் ஆணையர் ஆனந்த் ஸ்வரூப் தெரிவித்தார். முதல்வர் பு
பத்ரிநாத் தாம் கோயிலில் காணிக்கை முறைகேடு - விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு


கார்வால், 10 ஜூலை (ஹி.ச.)

உத்தராகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் தாம் கோயிலில் காணிக்கை தொடர்பான முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கார்வால் ஆணையர் ஆனந்த் ஸ்வரூப் தெரிவித்தார்.

முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் உத்தரவின் பேரில், பத்ரிநாத் தாம் கோயில் காணிக்கை முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தராகண்ட் அரசு இந்த உயர்மட்டக் குழுவை அமைத்தது.

தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) நிர்வாக இயக்குநர் சந்தீப் திவாரி மற்றும் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தின் இயக்குநர் (நிதி) ஜகத் சிங் சௌஹான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

புகார்தாரர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்த பிறகு, குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வரூப் கூறுகையில்,

அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அதன் தலைவராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். சந்தீப் திவாரி, ஜகத் சிங் சௌஹான் ஆகியோர் மற்ற இரு உறுப்பினர்கள். இந்த மூவர் குழு விவகாரத்தை விசாரித்து, அமைப்பை எவ்வாறு சீரமைப்பது, வெளிப்படையாகவும் சர்ச்சையின்றியும் வைத்திருப்பது என்பது குறித்து பரிந்துரைகளை அளிக்கும்.

எங்கள் குழு விரைவில் புகார்தாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b