அட்டை சுருள் கிடங்கில் பெரும் தீ விபத்து
புதுடெல்லி, 10 ஜூலை (ஹி.ச.) டெல்லியின் அலிப்பூர் பகுதியில் உள்ள அட்டை சுருள் கிடங்கு ஒன்றில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீவிர தீயணைப்பு நடவடிக்கைக்குப் பிறகு டெல்லி தீயணைப்புத் துறையினர் தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தினர். இத
அட்டை சுருள் கிடங்கில்  பெரும் தீ விபத்து


புதுடெல்லி, 10 ஜூலை (ஹி.ச.)

டெல்லியின் அலிப்பூர் பகுதியில் உள்ள அட்டை சுருள் கிடங்கு ஒன்றில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீவிர தீயணைப்பு நடவடிக்கைக்குப் பிறகு டெல்லி தீயணைப்புத் துறையினர் தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தினர்.

இது குறித்து டெல்லி தீயணைப்புத் துறை நிலைய அதிகாரி பிரவீன் குமார் கூறுகையில்,

கலி எண் 10 பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு 12:50 மணிக்கு முதல் தகவல் கிடைத்தது. ஆரம்பத்தில் இரண்டு தண்ணீர் டேங்கர்கள், இரண்டு தண்ணீர் பௌசர்கள் மற்றும் ஒரு பெரிய தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

பின்னர், உதவி பிரிவு அதிகாரிகளான பராஸ் மற்றும் நிதின் ஆகியோர் விரைந்தனர். நிலைமையை ஆய்வு செய்த ADO பராஸ், அது மிகப்பெரிய கிடங்கு வளாகம் என்பதையும், அதன் அருகே மற்றொரு பெரிய கிடங்கு இருப்பதையும் கண்டறிந்தார். தீ மேலும் பரவாமல் தடுக்க, இந்த விபத்து ‘வகை 6’ தீ விபத்தாக மேம்படுத்தப்பட்டது.

முக்கிய இடத்தில் தீயணைப்பு பணிகள் நடந்துகொண்டிருந்தபோது, அருகிலுள்ள கலி எண் 14-ல் உள்ள கிடங்கில் மற்றொரு தீ விபத்து ஏற்பட்டதாக துறைக்கு இரண்டாவது அழைப்பு வந்தது.

நிலைய அதிகாரி கிரிராஜ் இரண்டு தண்ணீர் பௌசர்களுடன் அங்கு அனுப்பப்பட்டு, அந்த தீயை வெற்றிகரமாக அணைத்துவிட்டு முக்கிய இடத்திற்கு திரும்பினார்.

தீ விபத்துக்குள்ளானது ஃபாயில் மற்றும் பிளாஸ்டிக் சுருள்கள் கையாளும் தொழிற்சாலை என தெரியவந்துள்ளது.

இது தீயணைப்புப் பணியில் குறிப்பிட்ட சவால்களை ஏற்படுத்தியது. எரியும்போது பொருட்கள் உருகின. குளிர்விப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு, அவை கடினமான பிளாஸ்டிக் போல இறுகிவிட்டன

என்று குமார் விளக்கினார்.

தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த விபத்தில் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Hindusthan Samachar / vidya.b