திமுக, அதிமுக சூழ்நிலைக்கேற்ப கூட்டணி அமைக்க முயன்றனர்,தவெக தயாரானதால் தான் தப்பித்தோம் - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு, 11 ஜூலை (ஹி.ச.) ஈரோட்டில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பட்டா வழங்குவதிலுள்ள குறைபாடுகளை களைய IAS அதிகாரியும் , அவருக்கு உறுதுணையாக IAS அ
Minister Sengottaiyan


ஈரோடு, 11 ஜூலை (ஹி.ச.)

ஈரோட்டில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

பட்டா வழங்குவதிலுள்ள குறைபாடுகளை களைய IAS அதிகாரியும் , அவருக்கு உறுதுணையாக IAS அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக கூடுதல் சர்வேயர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன்மூலம் 6 மாதத்திற்குள் பட்டா பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் . 9 மாதத்திற்குள் அனைத்தும் தீர்வு காணப்படும்

தமிழக அரசின் பணிகள், நிலைகள் தெளிவாக இருக்கும். தமிழக முதல்வரின் செயல்பாடுகளை இந்தியாவிலுள்ள அனைத்து முதல்வர்களும் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.

இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதல்வர் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதிமுகவும் - திமுகவும் சூழ்நிலைக்கேற்ப கூட்டணி அமைக்க முயன்றனர். தவெக தயாரானதால் தான் தப்பித்தோம்.

அதிமுக - திமுக கூட்டசி அமைந்தால் தவறில்லையே என மக்கள் கேட்பார்கள். தென்துருவம் - வட துருவம் சேராலாமா ? சேராது. அது போல் தான் இதுவும்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டின் போது உயரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அப்போதைய அரசு பணி வழங்கியது. அன்று யாரும் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN