Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 18 ஜூலை (ஹி.ச.)
இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான 'விக்ரம்-1' ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமாராவ் (கே.டி.ஆர்.) வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று பாராட்டினார்.
ஹைதராபாத் சரூர் நகரில் நடைபெற்ற 'யுவ சங்க்ராம் சதஸ்' நிகழ்ச்சியில் பேசிய அவர்,
இந்த சாதனையை நிகழ்த்திய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெலங்கானா அரசின் ஸ்டார்ட்அப் வளர்ப்பு மையமான டி-ஹப்பில் தனது பயணத்தைத் தொடங்கிய நிறுவனம் என்றும், இன்று உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் நிறுவனமாக வளர்ந்திருப்பது மாநிலத்தின் ஸ்டார்ட்அப் சூழலின் வெற்றியை எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் விண்வெளித் துறையில் புதிய அத்தியாயத்தை ஸ்கைரூட் நிறுவனம் எழுதியுள்ளதாக குறிப்பிட்ட கே.டி.ஆர். ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் உலகளாவிய அளவில் உயர்ந்திருப்பது இளைஞர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என்றார்.
இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய ஸ்கைரூட் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் கைதட்டி வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், இஸ்ரோவின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த ராக்கெட் ஏவுதல் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஸ்கைரூட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் உற்சாகக் கொண்டாட்டம் நிலவியது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA