Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 ஜூலை (ஹி.ச.)
அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 90 அமெரிக்க டாலரைத் தாண்டியது.
இதன் தாக்கமாக, வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த நிலையில், தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் 24,250 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமானது.
வங்கி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாகனத் துறை பங்குகளில் விற்பனை அழுத்தம் அதிகரித்ததால் சந்தை வீழ்ச்சி கண்டதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்க அச்சம் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களின் எச்சரிக்கையான அணுகுமுறை ஆகியவை சந்தையின் போக்கை தீர்மானித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P