Enter your Email Address to subscribe to our newsletters

திரிபுரா, 20 ஜூலை (ஹி.ச.)
திரிபுரா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அனுராக் தங்கர், அகர்தலாவில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் திங்கள்கிழமை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் காவல்துறையிலும் நிர்வாக வட்டாரங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1994-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான அனுராக் தங்கர், கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் திரிபுரா மாநில டிஜிபியாக பொறுப்பேற்றார்.
இதற்கு முன்பு, மாநில உளவுத்துறை டிஜிபியாகவும், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், சிபிஐயில் பல முக்கிய வழக்குகளை விசாரித்த அனுபவமும் அவருக்கு இருந்தது.
முதற்கட்ட விசாரணையில், அவர் தனது சேவைத் துப்பாக்கியால் தற்கொலை செய்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், மரணத்திற்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P