அரசியல் லாபத்திற்காக மாணவர்களை பயன்படுத்தும் ராகுல் காந்தி - பாஜக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் குற்றச்சாட்டு
ஹைதராபாத் , 23 ஜூலை (ஹி.ச.) மாணவர்களை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாகவும், தேர்வு தொடர்பான விவகாரங்களில் ஆக்கப்பூர்வமான விவாதத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக அமைதியின்மையை உருவாக்க முயற்சிப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீ
அரசியல் லாபத்திற்காக மாணவர்களை பயன்படுத்தும் ராகுல் காந்தி - பாஜக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் குற்றச்சாட்டு


ஹைதராபாத் , 23 ஜூலை (ஹி.ச.)

மாணவர்களை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாகவும், தேர்வு தொடர்பான விவகாரங்களில் ஆக்கப்பூர்வமான விவாதத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக அமைதியின்மையை உருவாக்க முயற்சிப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் ராகுல் காந்தியைப் போல மக்களிடம் நேர்மையற்ற முறையில் நடந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இதுவரை இருந்ததில்லை.

நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மாணவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாக அவர் வெட்கமின்றி பொய் கூறினார்.

ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஏராளமான வினாத்தாள் கசிவுகள் நடந்தபோதும், காங்கிரஸ் ஆளும் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்களில் ஏராளமான வினாத்தாள் கசிவுகள் நடந்தபோதும் ராகுல் காந்தி ஏன் மௌன பார்வையாளராக இருந்தார்? கணக்கிடப்பட்ட மௌனத்தை ஏன் கடைப்பிடித்தார்?

காங்கிரஸ் கட்சி செய்ய விரும்புவது மாணவர்களை சுரண்டி, குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் சுயநலமாக அரசியல் லாபம் அடைய வேண்டும் என்பது மட்டுமே.

இந்தியாவின் இளைஞர்களும் மாணவர்களும், இந்த எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்காலம் குறித்தோ அல்லது நலன் குறித்தோ கவலைப்படவில்லை என்பதை நன்கு அறிவார்கள்.

எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக மாணவர்களின் தோள்களில் இருந்து சுட்டு பயனடைய மட்டுமே விரும்புகின்றன.

இவ்வாறு கேசவன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b