தமிழக முதல்வரின் கர்நாடக பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் வினோத்
தஞ்சாவூர் , 26 ஜூலை (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் என்ற இடத்தில் கழிவுநீர் வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியினை வேளாண் துறை அமைச்சர் இன்று காலை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்த
தமிழக முதல்வரின்  கர்நாடக பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் வினோத்


தஞ்சாவூர் , 26 ஜூலை (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் என்ற இடத்தில் கழிவுநீர் வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியினை வேளாண் துறை அமைச்சர் இன்று காலை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வினோத்,

வரும் மழைக்காலங்களில் கும்பகோணம் நகரில் மழை நீர் தேங்காத வகையில் கும்பகோணத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தற்போது 70 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்படுகிறது.இந்தப் பணிகள் 20 நாட்களில் நிறைவு பெறும் என்றார்.

இனி வரும் காலம் வறட்சி நிலவும் என்பதால் குறைந்த தண்ணீர் செலவில் குறைந்த நாட்களில் அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகப்படுத்தப்படுமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எல் நினோ காலம் என்பதால் வறட்சி அதிகம் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் தரும் குறுகிய கால பயிர்களை அந்தந்த பகுதி விவசாயிகள் சாகுபடி செய்யலாம். உற்பத்தி பொருட்களை அரசு சந்தைப்படுத்தும் என்றார்.

மேகேதாட்டு அணை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் கர்நாடக செல்வதாக நேற்று முன் தினம் வேளாண் துறை அமைச்சர் வினோத் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் வினோத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, தமிழக முதல்வர் கர்நாடகம் செல்வது குறித்து தலைமை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

நேற்று முன் தினம் வேளாண் துறை அமைச்சர் மேகேதாட்டு அணை தொடர்பாக ஆகஸ்ட் 3ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் தமிழக முதல்வர் கலந்து கொள்வதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் கர்நாடகம் பயணம் குறித்து தலைமை அறிவிக்கும் என தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b