சிவானில் மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கிச் சூடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் திலீப் கோஷ்
கொல்கத்தா, 28 ஜூலை (ஹி.ச.) கடந்த ஜூலை 25 ஆம் தேதி பீகார் மாநிலம் சிவானில் தேர்வு முறைகேடுகள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்
சிவானில் மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கிச் சூடு : உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் திலீப் கோஷ்


கொல்கத்தா, 28 ஜூலை (ஹி.ச.)

கடந்த ஜூலை 25 ஆம் தேதி பீகார் மாநிலம் சிவானில் தேர்வு முறைகேடுகள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் கலைத்தனர்.

இந்த கலவரத்தின் போது ஏகே-47 துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.

சிவானில் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளன.

பந்த் ஆதரவாளர்களால் சுற்றி வளைக்கப்பட்ட பிறகு காவலர் ஒருவர் வானத்தை நோக்கி நான்கு முறை சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் அபிஷேக் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் அளித்த விளக்கத்தில், அந்த காவலர் ஜே.பி. சௌக் வழியாக வேறு ஒரு கொலை வழக்கை விசாரிக்கச் சென்ற மாவட்ட புலனாய்வுப் பிரிவு குழுவில் இடம்பெற்றிருந்ததாகவும், அப்போது போராட்டக் கூட்டத்தில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டதால் அந்த காவலர் ஏகே-47 தாக்குதல் துப்பாக்கியை பயன்படுத்தி வானத்தை நோக்கி நான்கு முறை சுட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை அங்கீகரிக்கப்படாதது மற்றும் பொருத்தமற்றது என்றும் மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் ஏகே-47 துப்பாக்கியை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்க அமைச்சர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் கூறுகையில்,

சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுக்க முடியாது.

இதுபோன்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும், அரசு அந்த விவகாரத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று கோஷ் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b