Enter your Email Address to subscribe to our newsletters

சங்காரெட்டி , 03 ஜூலை (ஹி.ச.)
தெலங்கானா மாநிலக் கடன் விவரங்கள் குறித்து காங்கிரஸ் அரசின் உயர்மட்ட தலைவர்களிடையே முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருவதாக பிஆர்எஸ் மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் ஹரீஷ் ராவ் குற்றம்சாட்டினார்.
சங்காரெட்டியில் நடைபெற்ற எஸ்ஐஆர் (SIR) விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர்,
மாநிலக் கடன் தொடர்பாக அரசு தரப்பில் வழங்கப்படும் தகவல்களே ஒரே மாதிரியாக இல்லாமல் மாறுபட்டு இருப்பதாக விமர்சித்தார்.
தெலங்கானா மாநிலம் உருவான பிறகு, இதுவரை ரூ.1,77,058 கோடி கடன் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஜூப்பள்ளி கிருஷ்ணா ராவ் தனக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாக அவர் கூறினார்.
ஆனால், இதே விவகாரம் குறித்து நான்கு மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.3,45,294 கோடி என தெரிவித்திருந்ததை அவர் நினைவூட்டினார்.
ஒரே அரசில் அமைச்சர் ஒரு கணக்கையும், முதலமைச்சர் வேறு கணக்கையும் தெரிவிப்பது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், அரசின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவதாகவும் ஹரீஷ் ராவ் கூறினார்.
எனவே, மாநிலக் கடன் தொடர்பான சரியான மற்றும் ஒரே நிலையான புள்ளிவிவரத்தை அரசு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA