கனமழையையும் பொருட்படுத்தாமல் தொழுகைக்கு ஏற்பாடு - தார் தாசில்தார் தகவல்
தார், 31 ஜூலை (ஹி.ச.) மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய போஜ்சாலா - கமல் மௌலா வளாகத்தை ஒட்டியுள்ள நிலத்தில் கனமழையையும் பொருட்படுத்தாமல் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான ஏற்பாடுகளை நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தார் தாசில்தார் தினே
கனமழையையும் பொருட்படுத்தாமல்  தொழுகைக்கு ஏற்பாடு - தார் தாசில்தார் தகவல்


தார், 31 ஜூலை (ஹி.ச.)

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய போஜ்சாலா - கமல் மௌலா வளாகத்தை ஒட்டியுள்ள நிலத்தில் கனமழையையும் பொருட்படுத்தாமல் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான ஏற்பாடுகளை நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தார் தாசில்தார் தினேஷ் குமார் உய்கே இன்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்த ஏற்பாடுகளுக்கு சில உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண நிர்வாகம் முயன்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக இன்று காலை தார் மாவட்ட ஆட்சியர் ராஜீவ் ரஞ்சன் மீனா, காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் போஜ்சாலா வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேவையான ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு குறித்து ஆட்சியர் மீனா கூறுகையில்,

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முன்னிட்டு காவல்துறையும் நிர்வாகமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

தேவையான ஏற்பாடுகளுக்கான வியூகத்தை வகுப்போம். இரண்டு நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களையும் தயார் செய்ய வேண்டியுள்ளது.

அதற்குத் தேவையான வளங்கள் குறித்து மதிப்பீடு செய்து வருகிறோம் என்றார்.

சர்ச்சைக்குரிய போஜ்சாலா - கமல் மௌலா வளாகத்தின் மதத் தன்மையை சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட போஜ்சாலா கோயில் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் மே 15 அன்று வழங்கிய தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளில் முஸ்லிம் தரப்பினர் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வளாகத்தை ஒட்டியுள்ள நிலத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் பக்தர்கள் சர்ச்சைக்குரிய வளாகத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் தொழுகை நடத்த வேண்டியிருந்ததாக சுட்டிக்காட்டி, வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அருகில் உள்ள இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

சமர்ப்பிக்கப்பட்ட வரைபடத்தில் கசரா எண் 596 என்ற இடத்திற்கு தனி அணுகு சாலை இருப்பதாகவும், அந்த இடம் இந்த நோக்கத்திற்கு பொருத்தமானது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b