மகாராஷ்டிராவில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
தானே , 31 ஜூலை (ஹி.ச.) மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவண்டியில் நான்கு மாடி கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி நேற்று இரவு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை இடிபாடுகளில் இருந்து மேலும் ஒரு உடலை மீட்புக
மகாராஷ்டிராவில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு


தானே , 31 ஜூலை (ஹி.ச.)

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவண்டியில் நான்கு மாடி கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி நேற்று இரவு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை இடிபாடுகளில் இருந்து மேலும் ஒரு உடலை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) உறுதிப்படுத்தியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடிய மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

NDRF குழுவினரால் பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கட்டிடம் இடிந்ததற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவத்தின் போது கட்டிடத்திற்குள் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த விவரங்களையும் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

கடந்த ஜூலை 8-ம் தேதி மகாராஷ்டிராவின் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் நிகழ்ந்த கட்டமைப்பு விபத்தைத் தொடர்ந்து இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிம்ப்ரி-சிஞ்ச்வாடில் மோஷி குப்பைக் கிடங்கில் குவிக்கப்பட்டிருந்த குப்பைக் குவியல் சரிந்து கட்டிடத்தின் மீது விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக துரித பூர்வாங்க விசாரணைக்கும், காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யவும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி ஆணையர் விஜய் சூர்யவன்ஷி உத்தரவிட்டார்.

மேலும், பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியின் சுற்றுச்சூழல் துறை மற்றும் ஒப்பந்ததாரர் நிறுவனமான ஆண்டனி லாரா ரினியூவபிள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / vidya.b