ரூ.2,500 கோடி மதிப்பில் உருவாகும் அதானி பாதுகாப்பு ஆலை - மத்திய அமைச்சர் சிந்தியா இன்று அடிக்கல் நாட்டுகிறார்
குவாலியர், 05 ஜூலை (ஹி.ச) மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிவபுரியில் ரூ.2,500 கோடி முதலீட்டில் அமையவுள்ள அதானி பாதுகாப்பு உற்பத்தி ஆலைக்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று அடிக்கல் நாட்டுகிறார். ''ஆத்மநிர்பர் பாரத்'' மற்றும் '
ரூ.2,500 கோடி மதிப்பிலான அதானி பாதுகாப்பு ஆலை -  மத்திய அமைச்சர் சிந்தியா இன்று அடிக்கல் நாட்டுகிறார்


குவாலியர், 05 ஜூலை (ஹி.ச)

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிவபுரியில் ரூ.2,500 கோடி முதலீட்டில் அமையவுள்ள அதானி பாதுகாப்பு உற்பத்தி ஆலைக்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

'ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டங்களுக்கு இந்த உற்பத்தி ஆலை முக்கிய உத்வேகம் அளிக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்த புதிய அதிநவீன தொழிற்சாலை, சிவபுரியை இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக மாற்றும். குவாலியரில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சிறு ஆயுத உற்பத்தி வளாகத்துடன் இணைந்து, இந்த மேம்பட்ட ஆலை குவாலியர்-சம்பல் பகுதியில் வலுவான பாதுகாப்பு உற்பத்தி சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் திறனை வலுப்படுத்தும் என்று அம்மாநில அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 5,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

உள்ளூர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) பாதுகாப்பு உற்பத்தி விநியோகச் சங்கிலியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறும்.

தற்போது குவாலியரில் உள்ள அதானி சிறு ஆயுத ஆலையுடன் 25-க்கும் மேற்பட்ட உள்ளூர் MSME நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், சிவபுரி திட்டம் இந்த வலைப்பின்னலை மேலும் விரிவுபடுத்தும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்து உற்பத்தியைத் தொடங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b