Enter your Email Address to subscribe to our newsletters

விசாகப்பட்டினம் , 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
வட ஆந்திராவின் வளர்ச்சியில் போகாபுரம் சர்வதேச விமான நிலையம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், அது அந்தப் பகுதியின் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்றும் ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தெரிவித்தார்.
போகாபுரம் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு வட ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகம் பெறும் என்று அவர் கூறினார். முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் வழிகாட்டுதலின் கீழ் ஆந்திரப் பிரதேசம் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பவன் கல்யாண்,
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை பாராட்டினார். 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், இந்தியாவை வளர்ச்சி பாதையில் பிரதமர் மோடி முன்னெடுத்து சென்று வருவதாக அவர் கூறினார்.
அவரது தலைமையில் நாடு விகசித் பாரத் என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் பிரதமர் மோடியை சிலர் விமர்சித்தபோது தான் மிகவும் வேதனை அடைந்ததாக பவன் கல்யாண் கூறினார்.
எத்தனை அவமதிப்புகள் மற்றும் தடைகள் வந்தாலும் பிரதமர் மோடி தனது முயற்சிகளில் இருந்து பின்வாங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தன்னை விமர்சித்தவர்களையும் மன்னிக்கும் உயர்ந்த குணம் கொண்டவர் என்றும், அவரைப் போன்ற தலைவர் நாட்டுக்கு கிடைத்திருப்பது பெருமைக்குரியது என்றும் பவன் கல்யாண் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA