சிராவண மாத 3 வது திங்கள் - காசி விஸ்வநாதர் கோயிலில் ஆயிரக்கணக்கான கன்வாரியாக்கள் தரிசனம்
வாரணாசி, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) புனித சிராவண மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத தாமத்தில் ஆயிரக்கணக்கான கன்வாரியா யாத்ரீகர்கள் குவிந்து சிவபெருமானை தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை முதலே கங்கையில் புனி
Today is the third Monday of the month of Shravana


வாரணாசி, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

புனித சிராவண மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத தாமத்தில் ஆயிரக்கணக்கான கன்வாரியா யாத்ரீகர்கள் குவிந்து சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

இன்று அதிகாலை முதலே கங்கையில் புனித நீராடிய பின் ஆயிரக்கணக்கான கன்வாரியாக்களும், உள்ளூர் பக்தர்களும் கோயிலில் குவியத் தொடங்கினர். வருகை தந்த பக்தர்கள் மீது மலர்களைத் தூவி கோயில் நிர்வாகம் வரவேற்பு அளித்தது.

ஹர் ஹர் மகாதேவ், போல் பம் என்ற பக்தி கோஷங்கள் நகரம் முழுவதும் எதிரொலித்தன. இன்றைய தினம் நாக பஞ்சமியுடன் இணைந்து வந்ததை முன்னிட்டு, ஸ்ரீ காசி விஸ்வநாத தாமம் பிரம்மாண்டமான மலர் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நாள் முழுவதும் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரை தரிசனத்தில் கலந்துகொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும், ஒழுங்கமைக்கப்பட்ட வரிசை முறை மற்றும் கோயிலின் ஆன்மிக சூழல் சிறப்பாக இருந்ததாக பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இந்தத் திருத்தலத்தில், புனித சிராவண மாதத்தில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் சிவபெருமானை வழிபட வருகை தருவது வழக்கம்.

இன்றும் குடும்பத்துடன் ஏராளமானோர் வந்து வழிபாடு நடத்தினர்.

Hindusthan Samachar / vidya.b