Enter your Email Address to subscribe to our newsletters

ஜம்மு, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காஸிகுண்ட் பகுதியில் இன்று காலை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) பாதுகாப்பு பதுங்கு குழி வாகனம் விபத்துக்குள்ளானது.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்றுடன் மோதியதில் இந்த வாகனம் கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த CRPF வீரர்கள் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர், காயமடைந்த வீரர்களை மீட்டு உடனடியாக காஸிகுண்டில் உள்ள 163-வது பட்டாலியன் CRPF முகாமிற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காஸிகுண்ட், காஷ்மீர் பள்ளத்தாக்கின் நுழைவாயிலாக கருதப்படும் முக்கியமான பகுதியாகும். இங்கு பாதுகாப்பு படையினரின் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் கவிழ்ந்த வாகனம் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b