Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
மகான் ஸ்ரீநாராயண குரு அவர்களின் பிறந்த தினமான ஆவணி சதயத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
ஆகஸ்ட் 28ஆம் தேதி வழங்கப்படும் உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, செப்டம்பர் 12ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும்.
அதேவேளையில், ஆகஸ்ட் 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறை, 1881ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை முறிச் சட்டத்தின் (Negotiable Instruments Act, 1881) கீழ் அறிவிக்கப்படாத விடுமுறை என்பதால், கன்னியாகுமரி மாவட்ட தலைமை கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அன்றைய தினம் செயல்படும்.
அரசு தொடர்பான அவசரப் பணிகளை மேற்கொள்ள தேவையான பணியாளர்களுடன் தலைமை கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ