ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு
கிருஷ்ணகிரி, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு குறித்த முன் அறிவிப்பு இன்றி மருத்துவமனைக்கு வருகை தந்த அமைச்சர், அவசர ச
ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு


கிருஷ்ணகிரி, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு குறித்த முன் அறிவிப்பு இன்றி மருத்துவமனைக்கு வருகை தந்த அமைச்சர், அவசர சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, மருந்தகம் மற்றும் ஆய்வக வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை, உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் மருத்துவமனையின் சுகாதாரம், தூய்மை பராமரிப்பு, மருந்துகளின் இருப்பு மற்றும் மருத்துவர்கள், செவிலியர்களின் பணி நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.

நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மருத்துவமனை வளாகத்தை எப்போதும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மருத்துவமனை முதல்வர், மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் உடனிருந்தனர்.

Hindusthan Samachar / vidya.b