உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை எதிரொலி - டேராடூனில் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
டேராடூன், 05 ஆகஸ்ட் (ஹி.ச.) உத்தரகண்ட் மாநிலத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து, டேராடூன் மாவட்ட நிர்வாகம் இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு நாள் விடு
Today is a holiday for schools and colleges in Dehradun


டேராடூன், 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

உத்தரகண்ட் மாநிலத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து, டேராடூன் மாவட்ட நிர்வாகம் இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.

இந்த விடுமுறை அறிவிப்பு மாவட்டம் முழுவதும் உள்ள 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளுக்கும் மற்றும் அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் பொருந்தும்.

நிலவும் வானிலை சூழலைக் கருத்தில் கொண்டு, அவசரநிலை ஏதேனும் ஏற்பட்டால் துரிதமான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உறுதி செய்யவும், எப்போதும் தயார் நிலையில் இருக்கவும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர், மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், அத்தியாவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணங்களை மேற்கொள்ளுமாறும் முதல்வர் பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் கேட்டுக்கொண்டார். மேலும், ஆறுகள், ஓடைகள் மற்றும் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், உள்ளூர் நிர்வாகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தினார்.

நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால், டேராடூனில் உள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோயில் வழியாகப் பாயும் தம்சா (Tamsa) ஆற்றின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

இடி, மின்னல், கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், டேராடூன், பாகேஷ்வர், தெஹ்ரி கர்வால் மற்றும் உத்தரகாஷி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு எச்சரிக்கை' (Orange Alert) விடுத்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b