Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் பிரமாண்டமான பதவியேற்பு விழாவில், புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
புதிதாக பதவியேற்க உள்ளவர்களில் மூத்த வழக்கறிஞர்களான என். ரமேஷ், ஜி.கே. முத்துக்குமார், எஸ். ரவிக்குமார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அதேபோல் வழக்கறிஞர்கள் என். திலீப் குமார், ஆர். விவேகானந்தன், ஏ. மனோகரன் ஆகியோரும் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்கின்றனர்.
மேலும் வழக்கறிஞர்கள் கே. கோவிந்தராஜன், ரஜினிஷ் பத்தியால் உள்ளிட்டோரும் புதிய நீதிபதிகளாக பொறுப்பேற்கின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். இந்த 15 புதிய நீதிபதிகளின் வருகைக்கு முன்பு, நீதிமன்றம் 51 நீதிபதிகளுடன் மட்டுமே இயங்கி வந்தது.
இன்றைய பதவியேற்பிற்குப் பின், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆகக் குறைந்துள்ளது.
15 புதிய நீதிபதிகளின் நியமனத்தின் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b