மும்பை லால்பாக்சா ராஜாவில் விநாயகர் தரிசனத்திற்காக குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
மும்பை, 16 செப்டம்பர் (ஹி.ச.) பத்து நாள் கணேசோத்சவ திருவிழாவை முன்னிட்டு மும்பையின் பிரசித்தி பெற்ற லால்பாக்சா ராஜா பந்தலில் இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். மும்பை லால்பாக் பகுதியில் அமைந்துள்ள இந்த பிரபல பந்தலில் வி
A


மும்பை, 16 செப்டம்பர் (ஹி.ச.)

பத்து நாள் கணேசோத்சவ திருவிழாவை முன்னிட்டு மும்பையின் பிரசித்தி பெற்ற லால்பாக்சா ராஜா பந்தலில் இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.

மும்பை லால்பாக் பகுதியில் அமைந்துள்ள இந்த பிரபல பந்தலில் விநாயகர் சிலையை தரிசித்து ஆசி பெறுவதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்தனர். பக்தர்கள் கணபதி பப்பா மோர்யா என்று முழக்கமிட்டவாறு பாரம்பரிய வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

1934-ம் ஆண்டு உள்ளூர் மீனவர்கள் மற்றும் வணிகர்களால் நிறுவப்பட்ட லால்பாக்சா ராஜா, மும்பையின் மிகவும் பிரபலமான பொது விநாயகர் சிலைகளில் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது தினமும் லட்சக்கணக்கான பக்தர்களை இது ஈர்க்கிறது. இதன் பரவலான புகழ் அதன் கலாச்சார முக்கியத்துவம், வரலாற்று வேர்கள் மற்றும் ஆழ்ந்த பக்தியில் இருந்து எழுகிறது.

இந்த விநாயகர் சிலை நவசாச்சா கணபதி என்று போற்றப்படுகிறது. அதாவது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவர் என்று பொருள். இந்த பந்தலில் மனமுருகி பிரார்த்தனை செய்தால் தங்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

திங்கட்கிழமை திருவிழா தொடங்கியதில் இருந்து பல்வேறு பிரபலங்களும் பொது நபர்களும் பந்தலுக்கு வருகை தந்துள்ளனர். தொழிலதிபர் கௌதம் சிங்கானியா மற்றும் நடிகர்கள் மனோஜ் ஜோஷி, சாயாஜி ஷிண்டே ஆகியோர் இதில் அடங்குவர். ரேமண்ட் குழுமத்தின் நிர்வாக இயக்குனரான கௌதம் சிங்கானியா, பக்தர்களிடையே நிலவிய சூழல் அற்புதமாக இருந்தது என்று விவரித்தார்.

நேற்று நடிகர்கள் மனோஜ் ஜோஷி மற்றும் சாயாஜி ஷிண்டே ஆகியோரும் ஆசி பெற்றனர். கடவுள் அனைத்து மாநிலங்களையும் மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் வைத்திருக்க வேண்டும், அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும் நலமும் இருக்க வேண்டும் என்று ஜோஷி தனது விருப்பத்தை தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, கொண்டாட்டத்தின் இரண்டாம் நாளன்று, நடிகை ஷில்பா ஷெட்டி தனது குடும்பத்துடன் பூஜை செய்த பின்னர் கணபதி விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்றார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA