Enter your Email Address to subscribe to our newsletters

பஞ்சாப், 02 செப்டம்பர் (ஹி.ச.)
பஞ்சாப் மாநிலம் ஷஹீத் பகத்சிங் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நள்ளிரவு நேரத்தில் திடீரென நிலம் லேசாக அதிர்ந்ததால் அப்பகுதி மக்கள் சிறிது நேரம் அச்சமடைந்தனர்.
இருப்பினும் இது மிகவும் லேசான நில அதிர்வு என்பதால் எந்தவித உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பலர் நில அதிர்வை உணர்ந்ததாக கூறியுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமிக்கடியில் குறைந்த ஆழத்தில் ஏற்பட்ட தட்டு நகர்வு காரணமாக இந்த அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 3க்கு கீழ் பதிவாகும் நிலநடுக்கங்கள் பொதுவாக லேசானவையாகவே கருதப்படும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b