செங்கல்பட்டு - விழுப்புரம் வழித்தடத்தில் பொறியியல் பணி - 5 முக்கிய ரயில்களின் சேவையில் மாற்ற செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.) செங்கல்பட்டு - விழுப்புரம் ரயில் வழித்தடத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று (செப்டம்பர் 3) முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை சில முக்கிய ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அ
செங்கல்பட்டு - விழுப்புரம் வழித்தடத்தில் பொறியியல் பணி - 5 முக்கிய ரயில்களின் சேவையில் மாற்ற செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு


சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)

செங்கல்பட்டு - விழுப்புரம் ரயில் வழித்தடத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று

(செப்டம்பர் 3) முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை சில முக்கிய ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் அதிவிரைவு ரயில் இன்றும், நாளை மற்றும் நாளை மறுநாளும் (செப்டம்பர் 4, 5) என மூன்று நாட்களுக்கு சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும்.

அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு தினமும் இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரயிலும் இன்று உட்பட செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளது. இந்த தாமதம் காரணமாக மதுரை மார்க்கத்தில் பயணிக்கும் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் இன்று மட்டும் ஒரு மணி நேரம் 35 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நாளைய தினத்திற்கான (செப்டம்பர் 6) மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இருந்து காச்சிகுடா செல்லும் விரைவு ரயில் நாளை 2 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாகவும், தாம்பரம் - போடிநாயக்கனூர் இடையேயான சிறப்பு ரயில் ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும்.

பொறியியல் பணிகள் முடிவடைந்ததும் ரயில் சேவை வழக்கம் போல் சீராக இயங்கும் என்றும், பயணிகள் இந்த தற்காலிக மாற்றத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b