ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நடுவானில் என்ஜின் கோளாறு – கொச்சிக்கு திரும்பிய விமானம்
மும்பை, 07 செப்டம்பர் (ஹி.ச.) கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் IX 415 விமானம், நடுவானில் முதல் என்ஜினில் எண்ணெய் அளவு வேகமாக குறைந்ததால், பயணத்தை ரத்து செய்து மீண்டும் கொச்சி விமான நிலையத்திற்கே திரும
ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து - பயணிகள் ஏமாற்றம்


மும்பை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் IX 415 விமானம், நடுவானில் முதல் என்ஜினில் எண்ணெய் அளவு வேகமாக குறைந்ததால், பயணத்தை ரத்து செய்து மீண்டும் கொச்சி விமான நிலையத்திற்கே திரும்பியது.

போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் புறப்பட்டு சுமார் 50 நிமிடங்களுக்குப் பிறகு, 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானி மற்றும் துணை விமானி Engine 1-ல் எரிபொருள் அளவு வேகமாக குறைந்து வருவதை கண்டறிந்தனர்.

இதையடுத்து விமானக் குழுவினர் நிலைமையை FORDEC (Facts, Options, Risks & Benefits, Decision, Execution, Check) முறையில் மதிப்பீடு செய்தனர். என்ஜினில் எண்ணெய் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டிருந்ததால், அபுதாபி பயணத்தைத் தொடர்வது பாதுகாப்பானது அல்ல என முடிவு செய்யப்பட்டது.

நிலைமை மேலும் மோசமடைந்து, எண்ணெய் அழுத்தம் (oil pressure) அபாயகரமான அளவுக்குச் சென்றதைத் தொடர்ந்து Engine 1 நிறுத்தப்பட்டது. இதையடுத்து விமானம் தனது பயணத்தை மாற்றி, கொச்சி சர்வதேச விமான நிலையத்தை நோக்கி திரும்பியது.

விமானம் பாதுகாப்பாக கொச்சியில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகளுக்கு நிலைமையின் தீவிரம் முழுமையாக தெரியாமல் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் நடுவானில் இருந்தபோதே என்ஜினில் ஏற்பட்ட எண்ணெய் அழுத்தம் மற்றும் எண்ணெய் அளவு தொடர்பான பிரச்சினையை விமானக் குழுவினர் கண்டறிந்து, முன்னெச்சரிக்கையாக விமானத்தைத் திருப்பி பாதுகாப்பாக தரையிறக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

என்ஜின் எண்ணெய் வேகமாகக் குறைந்ததற்கான காரணம் என்ன, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா என்பது குறித்து விமானப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P